May 21, 2012

தமிழ்க்குடில் தோற்றம், குறிக்கோள்..

தமிழ்க்குடில் தோற்றம்: 

மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஆணிவேர் அமிழ்ந்து கிடக்கும் இடமாய் நம் தமிழகம் இருப்பதை உலகம் ஒத்துக்கொள்ளும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் இன்றைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும் ஒப்பு நோக்க, தமிழகம் தனது அடையாளங்களை இழந்து விட்ட இழிநிலையை தெளிவாய் உணர முடிகிறது. இந்த நிலையை உணராமலே நம் சமூகம் சுயநலம் ஒன்றே வாழ்வென்ற பொருளில் இயங்க ஆரம்பித்து வெகுகாலமாகிவிட்ட நிலையில் தமிழர்களுடைய பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் சிந்தனையில் முளைத்த சிங்கார குடில்தான் நம் தமிழ்க்குடில்.

தமிழ்க்குடிலின் குறிக்கோள்: 

1. மனிதரிடத்தில் மனிதம் வளர்த்தல். 

2.தமிழரிடத்தில் தமிழ் வளர்த்தல். 

3.தமிழால் தமிழரை வாழ்வித்தல். 

4.தமிழரால் தமிழை செழிக்கச் செய்தல்.

5.தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவித்தல்.

6.தமிழையும், தமிழரையும் இணைத்தல்,

7.தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கல்வி, மருத்துவம், வாழ்வியல் அனுபவங்களை தொகுத்து இயற்கை வழியில் சமூகத்திற்கு வழிகாட்டல். தமிழர்களின் வாழ்வியல் நலன்களைப் பேணுதல், தமிழ் வழிக்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்தல்.

8.இயற்கை மூலிகைகளை இனம் கண்டு பேணிக்காத்து வளர செய்து இயற்கையான முறையில் மருத்துவம் செய்வித்தல். தமிழர்களின் அடையாளங்கள், அழிந்துவரும் அரிய, மற்றும் அறிவியல் கலைகளை புணர்பித்து மக்களின் உபயோகத்துக்கு கொண்டு வருதல்.

9.அனைவருக்கும் பொதுவான சமச்சீரான பொருளாதாரம் கிடைக்க வழிவகை செய்து பிறர்நலன் பேணும் பொதுவான வாழ்வியலை உருவாக்குதல்.

10.மண்ணின் வளம் காத்து, சிக்கனமான முறையில், இயற்கையான உணவு உற்பத்திக்கு வழிகாட்டல். நீர்நிலைகளை பாதுகாத்து, சிக்கனமாக, பயன்படுத்த கற்றுத்தந்து நிலத்தடி நீரின் அவசியம் உணர்த்தி விழிப்புணர்வு ஊட்டல்.

11.தமிழர்களின் தொழில்முறைகளால் பொருள் ஈட்ட செய்வதன் மூலம் அவர்களின் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டி பொருளாதார வழிவகை செய்தல். தமிழர்களின் மேன்மைதனை அனைவரும் உணரும்படியாக முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல். மனிதனுக்கு யோகக் கலைகளை கற்றுக்கொடுத்து இயற்கை சக்தியை மனிதன் பெறச்செய்தல். 

12.கூட்டுக்குடும்பத்தின் அவசியம், பெருமை உணர்த்தி குழந்தைப் பருவம் முதல் நல்லொழுக்கத்தையும், நன்றியுணர்ச்சியையும் ஊட்டி வளர்த்து மக்கள் தம் சந்ததியோடு மகிழ்வாக வாழ்வதன் மூலம், முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் இல்லாமல் செய்தல்.

13.மனிதனிடம் மனிதம் தழைக்கச்செய்து பிறர் நலம் பேணலின் முக்கியத்துவம் உணரச்செய்தல்.

14.தாய்மொழி வழிக் கல்வி கற்பது மூலம் சிறந்த தமிழ் சமூகத்தை உருவாக்க உதவுதல், பொருளாதார ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்டுதல்.

15.மக்களிடையே சமூக விழிப்புணர்வை தருதல், உள்கட்டமைப்பு முறைகளில் மேம்பாடடைய உதவுதல், அத்தியாவசியங்களை பூர்த்தி செய்து கொள்ள சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உதவி செய்தல், 

16.தனிமனித வாழ்வில் நல்லொழுக்கம், நற்கருணை, நற்பண்புகள், மேலோங்க செய்தல்.

அன்புடன் தமிழ்க்குடில்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!! வெல்க தமிழ்!!!

தொடர்புக்கு...

தமிழ்க்குடில் அறக்கட்டளை,
1/95, கிழக்குத்தெருசிலம்பூர் அஞ்சல்,
ஆண்டிமடம்
உடையார் பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம் - 608 901.
தமிழ்நாடு.
**********
Thamizhkkudil Trust,
1/95, East Street, Silamboor(Post)
Aandimadam, Udaiyarpalayam Taluk
Ariyaloor District - 608 901.
Tamil Nadu.
Mail ID  : thamizhkkudiltrust@gmail.com